கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
மக்களவை தேர்தலில் 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தலையொட்டி 89 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதன்படி காவலர்கள், துணை ராணுவத்தினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.