நாட்டு மக்களின் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தலைவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என தெரிவித்தார். நாட்டு மக்களின் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டம் தீட்டுவதாக கூறிய பிரதமர் மோடி, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார், இருசக்கர வாகனம், வீடு இருந்தால், அதை பறிக்கும் வகையில் சட்டம் இயற்றுவார்கள் என்றும் கூறினார்.
இண்டியா கூட்டணியில் ‘ஒரு வருடம் ஒரு பிரதமர்’ என்ற பார்முலாவை உருவாக்க விவாதம் நடப்பதாக கூறிய பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதில் அவர்கள் மும்முரமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.