செஸ் உலக சாம்பியன்ஷிப் எந்த நாட்டில் வைத்து நடைபெற்றாலும் தனது திறமையை வெளிப்படுத்துவேன் என செஸ் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கேண்டிடேட் தொடரில் வெற்றி பெற்றதில் தனக்கு மகிழ்ச்சி எனவும், சிறு வயதில் இருந்தே தனக்கு செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நடக்க இருக்கும் உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடர் எந்த நாட்டில் நடைபெற்றாலும் தனது சிறப்பான திறமையை வெளிபடுத்தி வெற்றி பெறுவேன் என குகேஷ் தெரிவித்தார்.