சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசித்தா என்பவர் கத்தார் நாட்டின் தோஹா பகுதியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது இவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அவரிடம் இருந்து 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.