தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே, பட்டாவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரடிகுளத்தைச் சேர்ந்த 153 பேருக்கு கடந்த 1993-ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை அந்த இடங்கள் வருவாய்த்துறை மூலம் முறையாக அளந்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பட்டா வழங்கப்பட்டும், மக்கள் அதனைப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இந்நிலையில், போலி ஆவணங்களைக் காட்டி சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, பட்டா அளிக்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.