சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணைக்குழு அமைக்கப்படு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பருமன் நீக்குவதற்காக புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தாக கூறப்படும் நிலையில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து சிகிச்சை தொடங்கிய 15 வது நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இச்சம்பவம் குறித்து ஹேமச்சந்திரனின் குடும்பத்தாரிடம் செல்போனில் ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் உயிரிழப்பு குறித்து விசாரணைக்குழு அமைக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் அதற்கென தனி விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.