புதுச்சேரியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் உள்ள பெட்டிக் கடைகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் பெரிய கடை பகுதியில் போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போதை பொருட்களை விற்பனை செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.