ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தேவிபட்டினத்தில் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பியை மாற்றி அமைப்பது தொடர்பாக முஹமது பிலால் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து அவரிடத்தில் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு மின்வாரிய அலுவலர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மின் வாரிய ஊழியர்கள் ரமேஷ்பாபு, கந்தசாமி ஆகிய இருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர்.
மேலும் உதவி மின் பொறியாளர் செல்வியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.