உதகையில் கோடை சீசன் தொடங்கிய நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் இந்த ஆண்டுக்கான கோடை சீசன் தொடங்கியதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
இதனால் உதகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய வாகனங்களை தவிர கனரக வாகனங்களுக்கு நாளை, நாளை மறுநாள் மற்றும் மே மாதம் முழுவதும் உதகையில் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.