கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காந்திநகரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய விழாவின் நிறைவாக கோயில் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.
இதில் திருமுதுகுன்றம் குமார தேவர்மடத்தின் 24வது குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் இரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.