திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறின் போது அரிவாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளான 4 பேர் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மையநாயக்கனூர் அருகே ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் ராசு தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
ராசுவுக்கும் அவரின் 2-வது மருமகளான ஜெயலலிதாவின் குடும்பத்தினருக்கும் சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராசு வீட்டிற்கு வந்த ஜெயலலிதாவின் தந்தை மற்றும் சகோதரர்கள், ராசுவையும், அவரது மனைவி உள்பட 4 பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.