ஈரோடு காவிரிக்கரையில் அமைந்துள்ள சோழீஸ்வரர் ஆலயத்தில் ஆதிருத்ர யாகம் நடைபெற்றது.
மழை வேண்டி நடைபெற்ற இந்த யாகத்தில் 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கினர்.
மக்கள் துன்பத்திலிருந்து விடுபடவும், காவிரியில் தண்ணீர் பெருகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.