அசாம் மாநில அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா நாகோனில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எப்பொழுதெல்லாம் காங்கிரஸ் வெற்றி பெறுகிறதோ அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவபேட் குறித்து விவாதம் நடப்பது இல்லை.
தோல்வி அடையும் போது மட்டும், அவர்கள் சந்தேகம் எழுப்புவதாகவும் , இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்ற போது காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.