சிதம்பரம் அருகே உள்ள பொன்னங்கோவில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலில், கடந்த 24 -ஆம் தேதி, முதல் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. இதனையடுத்து, பல்வேறு நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களின் மேல் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், சாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.