புதுச்சேரிக்கு வரும் அனைத்து ரயில்களிலும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் புதுச்சேரிக்கு வந்தடைந்த காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து புதுவைக்கு வரும் அனைத்து ரயில்களிலும் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர்.