காணாமல் போன சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த தீபா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி கணவருடன் வசித்து வந்த நிலையில், விவாகரத்து பெற்று தனது தாயாருடன் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 14 -ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், குடியாத்தத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினார்.
அதில், அவர் தீபாவை அழைத்துச் சென்று, தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும், ஹேமராஜை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.