கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனபத்திர காளியம்மன் கோயிலில், பக்தர்கள் தட்டில் அளித்த காணிக்கையை கையாடல் செய்ததாக, 4 பூசாரிகள் கைது செய்யப்பட்டனர்.
தேக்கம்பட்டி கிராமத்திலுள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில், பக்தர்கள் தட்டில் வழங்கும் காணிக்கைகளை அதற்கென வழங்கப்பட்டுள்ள உண்டியலில் பூசாரிகள் போடாமல் கையாடல் செய்ததாக கோயிலின் செயல் அலுவலர் புகாரளித்தார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் 4 பூசாரிகளையும் கைது செய்தனர்.