இஸ்ரோ தலைவர் எஸ் . சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படுவதாகவும் கூறினார்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.