தாய் மொழியில் பொறியியல் கல்வி : மாணவர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம்!
Oct 5, 2025, 05:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய் மொழியில் பொறியியல் கல்வி : மாணவர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம்!

Web Desk by Web Desk
Apr 28, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொறியியல் கல்வியை தாய்மொழியில் படிக்கலாம் என்று பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அறிவித்ததன் விளைவாக, தற்போது தாய்மொழியில் பொறியியல் படிப்புகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட, பொறியியல் படிப்பில் பிரகாசிக்க முடியாமல் போவதற்கு காரணம், ஆங்கில மொழியின் மீதான அச்சம் . எனவே பொறியியல் படிக்க ஆசை இருந்தும் மாணவர்கள் பலர் தொழில்நுட்பக் கல்வியில் சேராமல் புறக்கணித்து விடுகின்றனர் .

இதனை. கருத்தில் கொண்டு ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மாணவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. அதில், பொறியியல் படிப்புகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க விரும்புகின்றனரா அல்லது மாநில மொழிகளில் கற்க விரும்புகின்றனரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 42 சதவீத மாணவர்கள், மாநில மொழிகளிலேயே பொறியியல் படிப்புகளை படிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் , புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி , தொழில்நுட்பக் கல்வியைப் படிக்க ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் பொறியியல் கல்வியை மாநில மொழிகளில் கற்க பிரதமர் மோடி தலைமையிலான ஒரு முக்கிய முடிவு எடுத்தது.

2021ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பிரதமர் மோடி , இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்போடு இல்லாமல் , 2012ம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மத்திய அரசின் நிதி பெறும் 106 தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் கலந்துரையாடினார்.

மாநில மொழிகளில் பொறியியல் கல்விப் பயிற்றுவிப்பதற்கான அவசியம் , தொழில் கல்வித் துறையில் முன்னிற்கும் சவால்கள் மற்றும் அந்த சவால்களை சமாளிப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றியும் பிரதமர் மோடி அந்தக் கூட்டத்தில் விளக்கினார்.

இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி மற்றும் ஒடியா ஆகிய 11 மாநில மொழிகளில் தொழில் நுட்பக் கல்வி பயில , பயிற்றுவிக்க அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்தது.

முதல் கட்டமாக , தமிழ் உட்பட எட்டு மாநில மொழிகளில் பொறியியல் படிப்புகளை பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் 18 தனியார் கல்லூரிகள் உட்பட 22 பொறியியல் கல்லூரிகளில் மாநில மொழிகளில் தொழில் நுட்ப கல்வி படிக்க 2,580 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தகவல் அறிக்கையின் படி , தாய்மொழியில் தொழில் நுட்ப படிப்புகளில் சேர்க்கை ஒட்டுமொத்தமாக உயர்ந்துள்ளது. 2021-22 கல்வியாண்டில் மொத்தம் 80 சதவீத இடங்கள் காலியாக இருந்து நிலை மாறி 2022-23 கல்வியாண்டில் காலியான இடங்கள் 53 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் உத்தர பிரதேசத்தில் இந்த தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வி நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை மானவர்கள் சேர்க்கையில் இருந்தே கண்கூடாக காண முடிகிறது .

இந்த புதிய நடைமுறையால் மாநில மொழியில் கல்வி கற்பதோடு , அந்தந்த மாநில பண்பாட்டுடனும் பெற்ற கல்வியறிவை தேசத்துக்கு பயன்படுத்தும் எண்ணமும் மாணவர்களிடையே உருவாகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய சாதனைகளில் முதன்மையான சாதனை இது. அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வாழ்வும் வளமும் சேரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை .

நிறைய தொழில் நுட்ப அறிஞர்கள் தேவைப்படும் சூழலில் அதுவும் தாய்மொழியில் தொழில் நுட்ப கல்வி பெற்ற அறிஞர்கள் இந்தியாவில் உருவாகும்போது , உலகத்துக்கே பாரதம் விஸ்வ குரு ஆவது நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

Tags: engineering educationmother tongueengineering studies in tamil
ShareTweetSendShare
Previous Post

ஆர்.கே.நகரில் ரவுடி வெட்டிக்கொலை : மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கர் : அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies