தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக உழைப்பாளர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்களின் உன்னதத்தையும், உரிமையையும், தியாகத்தையும் குறிக்கும் இந்தச் சிறப்பு மிக்க தினத்தில், அனைவரின் கடும் உழைப்புக்கான பலன்கள் நிறைவாகக் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.
தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக உழைப்பாளர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்களின் உன்னதத்தையும், உரிமையையும், தியாகத்தையும் குறிக்கும் இந்தச் சிறப்பு மிக்க தினத்தில், அனைவரின் கடும் உழைப்புக்கான… pic.twitter.com/WW1kkO5zJH
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 1, 2024
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது நாடு உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை எட்ட வேண்டும் என்ற, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றத் துணையிருக்கும், ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.