குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் நிலையில், அங்கு உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலையை ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார். ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அயோத்தி செல்கிறார். அங்கு அவர் சிறப்பு பூஜைகள் செய்கிறார்.
மேலும் ஸ்ரீ ஹனுமான் கோயில், பிரபு ஸ்ரீ ராம் உள்ளிட்ட கோயில்களுக்கும் அவர் செல்கிறார். இதனையொட்டி அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.