தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே 3 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதனையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மற்றும் கர்நாடகாவில் கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒடிசா, பீகார், மேற்கு வங்கத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.