2024-ம் ஆண்டின் குரு பெயர்ச்சியை ஒட்டி, குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
மேஷ ராசியில் உள்ள கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் இருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை இரண்டாம் பாதத்திற்கு குருபகவான் பிற்பகல் ஒரு மணியளவில் பெயர்ச்சியாகிறார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்தக் கோவில் குரு பகவானின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. குரு பெயர்ச்சியை ஒட்டி ஆலங்குடி கோயிலில் மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
இதனை ஒட்டி, ஆலங்குடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஆலங்குடி மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.