உச்சநீதிமன்ற வழக்குகள் குறித்த விவரங்களை அறிய புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு மத்திய அரசு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியின் மூலம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் பணிகள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றத்துக்கு என்று புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் வாயிலாக வழக்கின் விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கோர்ட்டில் நடைபெறும் மிக முக்கியமான வழக்கு விசாரணைகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம்.
இந்த புதிய இணையதளம் மக்களுக்கு பல வகைகளில் பலன் அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.