ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இதன் மூலம், பெண்களுக்கு ஆண்டுதோறும் 18,000 ரூபாய் கிடைக்கும் என்றும், 5 ஆண்டுகளில் 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் அரசு பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டமும் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.