உக்ரைனில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் 5 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சர்வதேச விதிகளை மீறி சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் பழங்கால கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹாரிபாட்டர் கோட்டை என அழைக்கப்படும் பழங்கால கட்டடம் ஒன்றும், இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.