நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு சுமார் ஏழரை லட்ச ரூபாய் அபாராம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னுடன் உள்ள உறவை மறைப்பதற்காக நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ஒரு கோடி ரூபாய் டிரம்ப் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதனையும் மீறி அவர் பொதுவெளியில் விமர்சித்து வந்துள்ளார். இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம். டிரம்புக்கு சுமார் ஏழரை லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.