தென்காசியில் உள்ள பவானி அம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி தீச்சட்டிகளை ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புளியங்குடியில் உள்ள முப்பெருந்தேவியர் பவானி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது.
திருவிழாவின்போது உலக மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு பக்தர்கள் 1008 தீச் சட்டிகளை கையில் ஏந்தி, ஊர்வலமாக கொண்டுச் சென்றனர்.
இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.