பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.