சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 2 இலங்கை தமிழர்கள் உட்பட எட்டு பேரை போலீசர் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இலங்கை தமிழர்கள் இருவரை சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் அனுப்ப முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்ற 2 இலங்கை தமிழர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.