ஈரோட்டில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் ஜடையம்பாளையத்தை சேர்ந்த முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிறுமுகை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சத்தியமங்கலம் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் எதிரே வந்த கல்லூரி மாணவர்களின் கார் இவர்களின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில் முருகன், மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக், மகள் நித்திஷா ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.