டெல்லி மற்றும் நொய்டா பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
முதலில், சாணக்யபுரி சமஸ்கிருதி பள்ளி, மயூர் விஹார் மதர் மேரி உள்ளிட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மாணவர்களை வெளியேற்றி மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
பின்னர் அடுத்தடுத்த சில பள்ளிகளுக்கும் மிரட்டல் வந்ததுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.