முன்னாள் எம்எல்ஏக்கள் நீரஜ் பசோயா மற்றும் நசெப் சிங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர் ஊழல் புகாரில் சிறையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.