தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடும் வெப்பம் காரணமாக கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், மா மற்றும் பப்பாளி சாகுபடி பாதிப்பக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிப்பதோடு, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமெனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.