தென்காசியில் உள்ள தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழுப்புலியூரில் அமைந்துள்ள தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விடிய விடிய நடைபெற்ற தேரோட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.