கன்னியாகுமரியில் மனைவி, குழந்தைகளை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தக்கலை அருகே உள்ள மூலச்சலைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி மதுபோதையில் தனது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரை தாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார், தப்பியோடிய அருணகிரியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக மதுரையில் தலைமறைவாக இருந்த அருணகிரி ஊருக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.