விருதுநகரில் உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது.
பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இந்த பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தின்போது அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் கல்குவாரியில் இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.