ஈரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டின் பல பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு போலீசார், நாராயணவலசு பகுதியில் முறைகேடாக மது விற்பனை செய்த நெளஷாத் அலி என்பவரை கைது செய்து 240 மது பாட்டில்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
இதுபோல ராயர் பாளையத்தில் சாராயம் காய்ச்சிய ராமசாமி என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.