அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து பொதுமக்கள் விடுபடவும், காவிரியில் தண்ணீர் பெருகவும், தனதானியங்கள் செழிக்கவும், மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோயிலில் அதிருத்ர யாகம் கடந்த 21 -ஆம் தேதி துவங்கியது.
நவக்ரக ஹோமம், ஸ்கந்த ஹோமம், ஆதிருத்ர ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்நிலையில், அதிருத்ர மஹாயாக குண்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட சிவாச்சியார்கள் பங்கேற்று காவிரி கரையில் சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது.
பின்னர், வேத மந்திரம் முழங்க யாகம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.