விருதுநகரில் உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் கல்குவாரியின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது.
பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறின.
இந்த பயங்கர வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த கல்குவாரியின் உரிமையாளர் சேதுராமை காவல்துறையினர் கைது செய்தனர்.
விபத்து நடந்த இடத்தில் 1500 கிலோ வெடிமருந்துகள் இருந்தது தெரியவந்துள்ளது.