போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தவும், வாக்குமூலம் பதிவு செய்யவும் அனுமதிகோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், திகார் சிறைக்குச் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.