குருபெயர்ச்சி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அதிகாலை 4 மணி முதலே கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதயமாத்தாண்டு அபிஷேகமும் நடைபெற்றது.
மேலும், குருபெயர்ச்சி தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கைகள் செலுத்தி கடலில் புனித நீராடினர்.
பின்னர், பலவித பரிகார பூஜைகள் செய்தும், நீண்ட வரிசையில் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்தனர்.