காற்றில் கலந்த காவியக்குரல்!
Sep 11, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்றில் கலந்த காவியக்குரல்!

Web Desk by Web Desk
May 2, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய உமா ரமணன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருந்த இளையராஜவின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து அசத்திய உமா ரமணன் பற்றிய நினைவலைகளை பார்க்கலாம்…

தேனினும் இனிய குரலால் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பின்னணிப் பாடகி உமா, படித்துக் கொண்டிருந்தபோதே, பழனி விஜயலட்சுமியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார்.

பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ.வி.ரமணனுடன் இணைந்து மேடைக் கச்சேரிகளில் பாடியதுடன், அவரையே திருமணம் செய்து கொண்டார்.

மேடை கச்சேரியில் பாடி கொண்டிருந்த உமா ரமணனுக்கு, 1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார். தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடி உள்ளார் உமா ராமணன். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

குறிப்பாக, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 1981 ஆண்டு வெளியான குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் கல்வியில் சரஸ்வதி என்ற பாடலும், விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில், “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு போன்ற பாடலையும் பாடியிருந்தார் உமா ரமணன்.

ஒவ்வொரு காலக் காட்டத்திலும் ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கும் ஒரு தனித்துவம் பெற்றுவந்த நிலையில், 90-களில் வலந்த உமா ரமாணனின் குரல் காற்றினில் கேட்கும் காவிய ராகமாய் ஒலித்தன.

திரைப்படத்தில் மட்டுமின்றி, கடந்த 35 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும் கணவர் ரமணுடன் இணைந்து பாடியுள்ளார்.

1980ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது இசைப்பயணம், இளையராஜாவில் தொடங்கி இளையராஜாவுடனே முடிந்திருக்கிறது.

மீண்டும், மீண்டும் கேட்க துாண்டும் பல பாடல்களை அளித்த காவியக்குரல் காற்றில் கலந்தாலும் காலம் தாண்டியும் நம் காதுகளில் இன்னும் பல ஆண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.

Tags: Epic voice in the air!Singer Uma Ramanan passed away due to ill health
ShareTweetSendShare
Previous Post

பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி!

Next Post

அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 17 பேர் காயம்!

Related News

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies