நீலகிரி மாவட்டம், உதகையில் 126-வது மலர் கண்காட்சிக்கான மலர் தொட்டிகளை காட்சிப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
உதகையின் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ் உள்ளிட்ட 388 வகையான ரகங்களில், 6 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவற்றை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார்.