உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
டேராடூன் ஐ.எம்.எஸ் கல்லூரியில் படித்துவரும் 6 பேர் முசோரிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக முசோரி டேராடூன் சாலையில் உள்ள பானி வாலா பேண்ட் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 6 பேரில், 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுமி படுகாயமடைந்ததை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபதது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.