தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 171 தனியார் பள்ளிப்பேருந்துகள் வரழைக்கப்பட்டு முதலுதவி பெட்டி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றின் தரம் குறித்து சோதனை செய்தனர்.
அப்போது 22 வாகனங்கள் குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாகனங்களை திருப்பி அனுப்பப்பட்டன.
















