சென்னை, வேளச்சேரி பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்ட முயன்ற வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
வேளச்சேரி ரயில் நிலையம் அருகே இரவு நேரங்களில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் அதே இடத்தில் கோழிக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனத்தை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்