விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்திலிருந்து அருவிபோல் மழை நீர் ஊற்றியதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
விழுப்புரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது.
இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், ஜானகிபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்திலிருந்து அருவிபோல் மழை நீர் ஊற்றியதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். மேலும், வழுதரெட்டி பகுதியில் இடி விழுந்து தென்னை மரம் தீ பற்றி எரிந்து சேதமடைந்தது.