ராமநாதபுரம் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணத்தில் பூஜை போடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட கார், கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனையடுத்து காருக்கு பூஜை போடுவதற்காக ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக சாமி கோயிலுக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், கோயிலின் உள்ளே புகுந்து நூற்றுக்கால் மண்டபத்தின் மீது மோதி முழுமையாக சேதமடைந்தது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.