ஜம்மு-காஷ்மீரில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நேற்று இரவு நுழைந்தது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த ட்ரோன் பின்வாங்கி மீண்டும் பாகிஸ்தானுக்குள் திரும்பியது.
இதைத்தொடர்ந்து அந்த ட்ரோனிலிருந்து சந்தேகத்துக்கு இடமாக ஏதாவது இந்திய எல்லைக்குள் போடப்பட்டதா என பிஎஸ்எஃப் வீரர்கள் இன்று காலை எல்லைப் பகுதியில் சோதனை செய்தனர்.